
முன்னாள் போராளி அடித்து கொலை
ஸ்ரீலங்காவில் முன்னாள் போராளி அடித்து கொலை ,முன்னாள் போராளி ஒருவர் வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுளளார் .
விடுதலை புலிகள் அமைப்பின் போராளியாக உயர்ந்து தற்போது தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் தொலைபேசி பேசிக் கொண்டிருந்த பொழுது வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
தனது வீட்டுக்கு முன்பாக நின்று தொலைபேசியில் உரையாடி நின்ற இவரை வாகனத்தில் வந்தவர்கள் திடீரென இந்த வாகனத்தால் மோதி அவரை படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் .
வாகனங்கள் ஊடாக மோதி மக்கள் படுகொலை
இலங்கையில் இவ்வாறு வாகனங்கள் ஊடாக மோதி மக்களைக் படுகொலை செய்கின்ற நடவடிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது பின்னால் அரசியல் கட்சிகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் உள்ளதான தகவல் வெளியாகியிருக்கின்றது.
பல்துறை ஆளுமையுள்ள இவர் தனது வீட்டுக்கு முன்னால் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த பொழுதே அங்கு வந்த திடீரென வாகனம் ஒன்று இவரை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
டிப்பர் வாகனங்கள் மற்றும் ஏனைய கனரக வாகனங்கள் ஊடகவே இந்த தாக்குதல் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது ஒரு திட்டமிடப்பட்ட வலிந்து படுகொலை தாக்குதலாக ஸ்ரீலங்காவில் அதிகரித்து செல்லப்படுவதாகவும் நிவாரண உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்வதன் ஊடாகவே ,
அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்த முடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்களை ஏற்படுத்தி பகவர்களை அல்லது தனது எதிராளிகளாக கருதப்படும் மக்களை படுகொலை செய்கின்ற நடவடிக்கை இலங்கையில் அதிகரித்து செல்லுகின்றது .
இந்த விடயமானது உலக ஊடகங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாற்றம் பெற்று வருவதற்கான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை சடலம் மீட்கப்பட்டு தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் ,
போலீசார் தமது பூர்வீக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்
- உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்
- தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
- தலவாக்கலையில் கவிழ்த்த கார்
- யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி
- அரச அதிகாரிகள் மீது தாக்குதல்
- ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை
- இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய்
- கனடா நினைவுத்தூபி இலங்கை அதிருப்தி
- தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்