முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்
முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (01) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24
மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முகக்கவத்தை அணியாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.