மாளிகாவத்தை நெரிசலில் பலியான சம்பவம் – 7 பேருக்கு விளக்கமறியல்
கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற பண பங்கீடு சம்பவம்
தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம்
திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவு பிறப்பித்தது.
கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பணம்
பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள்
உயிரிழந்துள்ளனர்.68, 62, 59 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த நெரிசலில் சிக்கிய மேலும் 9 பேர் காயமடைந்;து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஊடரங்கு சட்டம் அமுவில் உள்ள வேளையில் பணப்பகிர்வு இடம்பெற்றிருப்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.