மரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா

Spread the love

மரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா

சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

ரத்த அழுத்தம்…. இதயத்தில் பிரச்சனை – உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா
ராணா டகுபதி


ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி,

பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ்

என்ற பெண் தொழில் அதிபரை காதலித்து வந்த ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “வாழ்க்கை

மிக வேகமாகப் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு சிக்கல் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்கு சில உடல் உபாதைகள் இருந்தன.

ராணா டகுபதி

ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் சேர்ந்திருந்தது. சிறுநீரகங்கள் செயல் இழந்தது. இதனால் ரத்தக் கசிவு, பக்கவாதம்

வருவதற்கான 70 சதவீதம் வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன” எனக்கூறி கண்கலங்கினார் ராணா.

Leave a Reply