மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்

Spread the love

மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும்

கரையோர பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்

விதிக்கப்பட்டிருப்பதாக கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் மத்திய மையம் அறிவித்துள்ளது.

கொத்தொட்டுவ, முல்லேரியாவ ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் நேற்றிரவு

7 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளது.

நடமாட்டாங்களைத் தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

விசேடமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில்

கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதினால் வீடுகளில்

தங்கியிருக்குமாறும் பொலிசார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply