பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
பாதாள உலக குழு உறுப்பினரான அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என அழைக்கப்படும் ´சன்சைன் சுத்தா´ மீது துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு
உதவி புரிந்த சந்தேகத்தின் பேரில் தலங்கம பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக வைத்து
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சன்சைன் சுத்தா காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது