பதாதைகள் ஏந்திய பெண் பொலிஸார் நீக்கம்
வீதி ஒழுங்குச் சட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் பதாதைகளை வீதிகளில் காட்சிப்படுத்திய பெண் பொலிஸார் அக்கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனால், போக்குவரத்து பிரிவின்
அதிகாரிகளுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பதாதைகளைக் காட்சிப்படுத்துவதற்கு, பெண் பொலிஸாரை பயன்படுத்தியமைத் தொடர்பில் சமூக
வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, அவர்கள் இந்த கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.