பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார் .
ஊரடங்கை போட்டு வைத்து
ஊரெல்லாம் அடக்கி வைத்து
ஏழைகளை வதைக்குது பார்
ஏறெடுத்தும் பார்கலை பார் …..
நாடாளும் மன்னர் என்று
நா கிழிய கத்துகிறார் …
ஒத்த வேளை உணவின்றி
ஓலை குடில் அழுகுது பார் ….
கத்துகிற இவர் சேதி
காதோரம் கேட்கலையோ ..?
சொத்தெழுதி கொடுக்க வேண்டாம்
சோறு போட முடியலையையோ ..?
வந்த கொரனோ அடக்கிடத்தான்
வழியேதும் தெரியலையோ …?
திண்ணையில அழுகிறவர் – குரல்
தெருவேதும் கேட்கலையோ …?
ஏ மனிதா உன் மனதை
எங்கு கொண்டு சிறை வைத்தாய் ..?
பாலகர்கள் பசிபோக்க
பைந்தமிழே முடியலையோ …?
பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்
பட்டினியால் ஊர் கதற
பாரதமும் காணலையோ ..?
கொட்டுகிற கண்ணீரில்
கொடுங்கோலும் கரையலையோ …?
ஒட்டு வாங்க ஓடி வந்தார்
ஒரு வரையும் காணலையே …
நம்பி நின்ற மக்களையே
நாடி வந்தும் பார்க்கலையே ….
தேம்பி தேம்பி அழும் பிள்ளாய்
தேவைகளை போக்கிடுவாய் …
தேவடியா பயலுகளா
தேர்தல் வந்தால் வருவீரா ….!
- வன்னி மைந்தன்-
-ஆக்கம் -09-05-2020 - வன்னி மைந்தன் கவிதைகள்