தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு

Spread the love

தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயதான தம்பதிகள் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் தனுஷ்கோடி வழியாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதிகள் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

இவர்கள் இருவரும் மயக்கமுற்ற நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

தம்பதிகள் சடலமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Leave a Reply