சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்
இலங்கை நுவரெலியா பகுதியில் மதுபான கடை ஒன்றை திறந்து வியாபாரம்
செய்ய படுவதாக மது வரி திணைக்கழகத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை
அடுத்து சோதனை செய்திட விரைந்து சென்ற இரு அதிகாரிகள் அந்த கடையினை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர் .
அவ்வேளை இவர்களை ஆயுத முனையில் மிரட்டிய நபர்கள் ,அகோரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
இவர்களின் கோரா தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த இரு அதிகாரிகளும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்திய மூவர் காவல்துறையினரால்
கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் ,குடி மகன்கள்
செய்த ரகளையால் அப்பாவி அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சோகம் இடம்பெற்றுள்ளது .