கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி

Spread the love

கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி

ஹாலிவுட் பிரபலங்கள் அர்னால்டு, டிகாப்ரியோ ஆகியோர் ரூ.98 கோடி கொரோனாவுக்கு நிதி கொடுத்துள்ளார்கள்.

கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி


அர்னால்டு, டிகாப்ரியோ
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இதற்கு 5 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர்.

2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்கவும், வைரஸ் தடுப்பு

மருந்துகளை கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் அங்கு பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.

‘டைட்டானிக்’ உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான லியானர்டோ டிகாப்ரியோ, தனது அறைக்கட்டளை

மூலம் கொரோனா நிதியாக இந்திய மதிப்பில் ரூ.91 கோடி திரட்டி உள்ளார். இந்த தொகையை ஏழைகளுக்கு உணவு வழங்கவும்,

ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் வழங்குகிறார்.

இது போல் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி நிதி

வழங்கி உள்ளார். ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு

உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த நன்கொடையை வழங்கி இருக்கிறார். “கொரோனாவை எதிர்த்து மருத்துமனைகளில்

போராடும் உண்மையான கதாநாயகர்களை பாதுகாக்க இந்த நிதியை வழங்கியதில் பெருமைப்படுகிறேன். தற்போதைய

மோசமான சூழ்நிலையில் வீட்டில் இருந்து குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று அர்னால்டு கூறியுள்ளா

கொரோனா நிவாரணம்:
கொரோனா நிவாரணம்:

Leave a Reply