ஏன் தவிக்க விட்டாய் …?

Spread the love

ஏன் தவிக்க விட்டாய் …?

நேற்றெங்கள் தோட்டத்து பூவானவள்
நெஞ்சுக்குள் நிற்கின்ற விழியானவள்
அன்புக்கும் பண்புக்கும் உயிரானவள்
அகிலத்தின் நோயதில் பலியானவள் …..

வீம்புக்கு என்றுமே செல்லாதவள்
விடுதலை போருக்கு உயிரானவள் – உடல்
தாங்கிட இன்று முடியலையே – பக்கம்
தங்கிட கூட முடியலையே …

வேருக்கு நீர் வீட்ட குலமகளே
வேணடுறோம் மீள வா மகளே …
அறத்திலே நின்ற பெரு மகளே
அழுகிறோம் விழியை துடை மகளே ….

என்றுன்னை இனி நாங்கள் பார்த்துடுவோம்..?
எப்படி உன்னோடு கூடிடுவோம் …?
தீ வந்து உன் உடலை தீண்டிடவோ ..?
தீ தின்ன உன்னை நாம் பார்த்திடவோ ..?

அழுகிறோம் எம் விழி துடைப்பாயா ..?
ஆறுதல் தந்திடா வாராயா ..?
வேருக்கு நீர் விட்ட பெருமகளே
வேணடுறோம் மீள வந்திடுவாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -15-04-2020

புலி முக்கியஸ்தர் மனைவி
புலி முக்கியஸ்தர் மனைவி

      Leave a Reply