
எழுந்து வா
எழுந்து வெடிக்கும் ஏவுகணையாய்
ஏன் வெடிக்க மறுக்கின்றாய்
ஏக்கமதை மனம் வைத்து
ஏன் நொந்து அழுகின்றாய்
தூக்கமதை நீ தொலைத்து
துயரில் ஏன் வாடுகின்றாய்
பாவி என்றேன் உன்னை
பாழ் படுத்தி கொள்கின்றாய்
நீதி வென்றிட வா
நீளம் பாய வா
உன் தகைமை எடுத்துரைக்க
உரு வேற்றி ஆட வா
சதிகள் புரிந்தாரை
சாகடிக்க வா
வந்த வழி தடத்தை
வரலாறாய் எழுத வா
உறங்கி கிடந்து
உறுமி அழுவதால்
ஏதும் நடக்காது
எழுந்து வா ..
ஆக்கம் 10-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
- என்னை பார்ப்பாயா பதில் சொல்
- மீண்டும் பதிகின்றேன்
- நீறாகிப் போன நினைவுகள்
- கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா