உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!

Spread the love

உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!

இன்றைய பொழுதில் எம் நிகழ்வு
இதயமே உனக்கு தெரிகிறதா
இன்றைய நாளில் இணைந்தோம்
இன்றந்த நாள் புரிகிறதா

ஆண்டுகள் நூறு கழிந்தாலும்
அதுபோல் சுகமொன்று மீள்வருமா
அத்தனை ஆனந்தம் அதிலிருக்கு
அன்பே உனக்கு தெரிகிறதா

துளியாய் கழிந்த நிமிடங்களை
தூசி தட்டி பார்த்திடுவாய் – கண்
தூரிகையால் எனை வரைந்த
துடிப்பை நீயும் புரிந்திடுவாய்

கொட்டிய கண்ணீர் துளிகளையே – ஒரு
கொள்கலன் கொண்டு நிரப்பிடலாம்
கொண்டை கலைந்த நிமிடங்களை
கொட்டி சேதி சொல்லிடலாம்

பக்கத்தில் நீ இருந்த நிமிடங்களோ – ஒரு
பட்டி பொங்கல் போலிருக்கும் – இன்று
பக்கங்கள் திறந்து பார்க்கையிலே
பார்விழி இரண்டில் நீர் இருக்கும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-06-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply