இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – புதிதாக 08 நோயாளர்கள் பாதிப்பு

Spread the love

இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – புதிதாக 08 நோயாளர்கள் பாதிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் இன்று காலை 6.00 மணி வரையில் 08 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில,; இந்த எட்டு பேரில் ஒருவர்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றும் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவரென்று அடையகளங்காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 07 பேரும் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர் முப்படையினரால் நடத்தப்படும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்வர்கள்.

இதற்கமைவாக கந்தக்காடு போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்றைய தினம் வரை

கொவிட் 19 தொற்று நோயாளர் எண்ணிக்கை 601 என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்று வருகின்ற கைதிகள் – 482
பணியாளர் சபையின் உறுப்பினர்கள் -66


அழைப்பின் பேரில் வரும் பணியாளர்கள் -05
குடும்பம் மற்றும் தொடர்புபட்டவர்கள் 44
வெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட் 19 வைரஸ் நோயாளர் -01


கொவிட் 19 தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை -601

இன்றைய தினம் வெளிநாடுகளில் இருந்து வந்த 07 பேர் முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்றைய தினம் டோஹாவில் இருந்து 13பேரும் சென்னையில் இருந்து 29 பேரும் ஜப்பானில் இருந்து ஒருவரும்

இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்வுள்ளனர்.

இன்றைய தினம் (03) இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 55 பேர்

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து வீடுகளுக்கு செல்லவுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக புனானி மத்திய நிலையத்pல் 52 பேரும் ஹோட்டல் ஜெட்வினில் ஒருவரும் கற்பிட்டி ருவல மத்தியத்தில் இருவருமாக இவ்வாறு வீடு திரும்புகின்றனர்.

இதுவரையில் (03.08.2020) 29,121 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

முப்படையினாரால் நடத்தப்படும் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 2294 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய (02) தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,210 ஆகும். இலங்கையில் இதுவரையில் 162,090 பேருக்கு பி.சி.ஆர் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை இன்றைய தினம் (03) காலை 6.00 மணியளவில் 75 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து

சென்றுள்ளனர். இவர்களுள்ள 06 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடடிற்கு வந்த பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

இருந்தவர்கள். ஏனைய 69 பேரும் உள்நாட்டில் அடையாங்காணப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply