இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக உயர்வு

Spread the love

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் (2020.05.21) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 17 பதிய நோயாளர்கள்;

பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இந்த நோயாளர்களில் இருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த

கடற்படை அங்கத்தவர்கள். ஏனை 15 பேர் கிராகம தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு

உட்படுத்தப்பட்டுள்ளவர்கள். இவர்கள் டுபாயில் இருந்து வந்தவர்கள்.

இன்றைய தினத்தில் இதுவரையில் இலங்கையில் பதிவான கொரேனா வைரசு நோயாளர்களில் 604 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 432 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்றைய தினத்தில் (2020.05.20) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1108 ஆவதுடன் இத்தினத்தில்

அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 01 ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

      Author: நலன் விரும்பி

      Leave a Reply