இராணுவத்திற்கு கொரனோ -3 இராணுவ முகாம்கள் அடித்து பூட்டு
கொஹுவல, பேலியகொட, வெதமுல்ல ஆகிய STF முகாம்களிலுள்ள 9 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், குறித்த மூன்று STF முகாம்களும் முடக்கப்பட்டுள்ளன.
குறித்த முகாம்களில் சமைப்பதற்காக பேலியகொடையில் இருந்து மீன்
கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன்மூலமே கொரோனா தொற்று
முகாம்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிரிஹான மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களில்
கடமையாற்றும் 3 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.