பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை பிரியாமணி, பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் என்று கூறியிருக்கிறார்.
பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி
பிரியாமணி
பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம்
கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா
ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து
பிரபலமானார். அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
பிரியாமணி 2005 ஆம் ஆண்டில் ‘நவ வசந்தம்’ என்ற படத்தில் தருண் என்ற நடிகருடன் நடித்தார். அப்போது பிரியாமணிக்கும்
தருணுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவியது. தருண் தமிழில் புன்னகை தேசம், உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தருண் பிரியாமணி
இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், “ஒரு நாள், தருண் அம்மா ரோஜா ரமணி வந்து என்னிடம் சிறிது நேரம் பேசினார்.
நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீ விரும்பினால், என் மகன் தருணை திருமணம் செய்து கொள்ள
வேண்டும். அவர் அப்படி கேட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் பின்னர் தருண் அவரது
அம்மாவிடம் எங்கள் இருவருக்கும் இடையே நட்பு தான் காதல் அல்ல என்று கூறி புரிய வைத்தார். என்றார்.
பிரியாமணி 2017 ஆம் ஆண்டில் முஸ்தாஃப் ராஜ் என்பவரைத் திருமணம் செய்தார். தற்போது ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘நாரப்பா’வில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.