சிரிக்கும் ….வாழ்வு ….!

Spread the love

சிரிக்கும் ….வாழ்வு ….!

சந்தன மேனி வெந்தணல் வேக
சாலையில் போகுதடி ….
சாளரம் வைத்த சட்டை மாட்டி-
சர வெடி போடுதடி-

ஆளை அள்ளும் புயலும் கிள்ள
அந்தோ நெளியுதடி ….
ஆடவர் கண்கள் மேனியில் துள்ள
அடி வாங்கியே மாயுதடி …

கூடு உடைத்து கறைவைகள் ஓட
கூடுது வீதிகளே ….
கூட்டியே அள்ளிட – பார்த்தே
கூடுது சதிகளே ….

ஏங்கி சாகும் வேருக்கின்று
ஏக்கம் புரியாது .
ஏறி பறக்கும் சீட்டுக்கின்று – இந்த
ஏக்கம் தெரியாது ….

அடி வாங்கி நொந்து
அழுகையில் தானே அவலம் புரிகிறது- இப்போ
அழுது புலம்பி என் கண்டாய்
அட வாழ்வு சிரிக்கிறது ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/02/2019

Leave a Reply