வவுனியாவில் இ.போ.சபை பேருந்துகள் செய்யும் வேலை

Spread the love

வவுனியாவில் இ.போ.சபை பேருந்துகள் செய்யும் வேலை

வவுனியாவில் இ.போ.ச பேரூந்து சேவைகள் உள்ளூர் சேவைகள் நேரகாலத்தில் முறையாகவும், சரியாகவும்

இடம்பெறுவதில்லை. இதனால் சரியான நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியவில்லை எனவும் பணம்

கொடுத்து பெற்றுக்கொள்ளப்பட்ட பருவகால பயணச்சீட்டுக்கள் பலனளிக்கவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா இ.போ.ச பேரூந்து சாலையிலுள்ள பேரூந்துகள் அதிகளவில் வெளிமாவட்டங்களை நோக்கிச் செல்கின்றன. வவுனியாவிலுள்ள கிராமப்புறங்களுக்கு உரிய நேரத்திலும்,

முறையாகவும் இடம்பெறுவதில்லை. இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன்

பாடசாலை ஆரம்பமாகிய பின்னரே பாடசாலைக்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

அத்துடன் கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களிலுள்ள வியாபார வர்த்தக நிலையங்களில் பணியாற்றும்

இளைஞர்கள், யுவதிகள் பேரூந்து உரிய நேரத்தில் இடம்பெறாமையினால் உரிய நேரகாலத்தில் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா இ.போ.ச சாலையினால் வவுனியாவிலுள்ள மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இ.போ.ச சாலையினால் மேலும் மாணவர்கள் உட்பட பலர்

நிர்க்கதி நிலைக்குக்தள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலைமைகளை அகற்றி பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பான

சேவைகளையும் தன்னிறைவான சேவைகளையும் வழங்க வவுனியா இ.போ.ச சாலை முன்வரவேண்டும் என்று மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் குறித்து வவுனியா இ.போ.ச சாலையின் முகாமையாளர் எச்.சாஹிருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

வவுனியா சாலைக்கு 15 பேரூந்து சாரதிகளும், நடத்துனர்களும் தேவைப்படுகின்றனர். இவ்வாறான ஆளணிப்பற்றாக்குறை காரணமாக

கிராமப்புறங்களுக்கான சேவைகள் மேற்கொள்ள முடியவில்லை. போதியளவு பேரூந்துகள் சாலையில் காணப்படுகின்ற போதிலும் ஆளணி பற்றாக்குறையை

நிவர்த்தி செய்து தருமாறு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தர்மபால, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளாக கே. காதர் மஸ்தான்,

ரிஷாட் பதியூதீன் மற்றும் இ.போ.ச போக்குவரத்துச்சபைப்ணிப்பாளர் ஆகியோரிடம்

கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இ.போ.சபை

Leave a Reply