வவுனியாவில் இராணுவத்தால் 11 பேர் கைது- பீதியில் மக்கள் photo

Spread the love

வவுனியாவில் இராணுவத்தால் 11 பேர் கைது- பீதியில் மக்கள் photo

வவுனியாவில் ஏ9 வீதியில் இராணுவமும், பொலிஸாரும் இணைந்து மோப்பநாய் சகிதம் சோதனை

நடவடிக்கையினை கடந்த இரு தினங்களாக மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும்

இராணுவமும் இணைந்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகத்திற்கிடமான வீதியால் செல்லும் பேரூந்துகள்

மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன் மோப்ப நாயின் மூலமும்

சோதனையினை மேற்கொண்டிருந்தனர்.

இவ் நடவடிக்கையில் 33கிலோகிராம் கஞ்சா, 35 முதிரை பலகைகள் அத்தோடு பதினொரு பேர் கைது

செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு தினங்களாக புளியங்குளம், ஓமந்தை அண்மித்து பகுதியில் இரவு பகலாக இராணுவத்தினரும் பொலிஸாரும்

இணைந்து மேற்கொண்ட சோதனையிலே பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நிருபர் – வெடியரசன்

வவுனியாவில் இராணுவத்தால்
DSC05751

Leave a Reply