வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக கல்விப்பணிப்பாளர் நியமனம்photo
வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நியமனம்
வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி
கல்விப்பணிப்பாளர் சுப்பையா அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில்
வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் இடம் இருந்து இதற்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
வவுனியாவில் பல பாடசாலைகளில் அதிபராகவும், வவுனியா தெற்கு பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும்
கடமையாற்றி கடந்தமாதம் ஓய்வு பெற்ற நிலையிலேயே வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.