மன்னார் ,வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும்
வடமத்தியமாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்
பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியி;ட்டுள்ள வானிலை அறிக்கையில் ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்
மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.