மனித உடல்களுடன் -கரை ஒதுங்கிய ஆவி படகு

Spread the love

ஜப்பானில் –மனித உடல்களுடன் -கரை ஒதுங்கிய ஆவி படகு

ஜப்பான் நாட்டின் – Japan’s சடோ தீவு பகுதியில் உடைந்த நிலையில் ஆவி படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது .

அந்த படகுக்குள் இருந்து சுமார் ஏழு மனித சடலங்கள் உருக்குலைந்த நிலையில் இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த ஆவி படகில் இரண்டு மனித உடல்களுடன் ,தலைகள் உள்ளிட்ட ஐந்து மனித சடலங்கள் எலும்பு கூடுகளாக மீட்க பட்டுள்ளன .

வட கொரியாவில் நிலவும் பஞ்சத்தில் இருந்தும் ,சர்வாதிகார இரும்பு பிடியில் இருந்து உயிர் தப்பிக்கும் நோக்குடன் மக்கள் இவ்வாறான மீன் பிடி படகில்

மக்கள் கரை ஏறுவதாகவும் ,அவ்வாறானவர்களே இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக ஜப்பான் நாடு தெரிவித்துள்ளது .

தப்பித்து செல்லும் மக்கள் வடகொரியா இராணுவத்தால் சுட்டு கொல்ல பட்டிருக்கலாம் எனவும் ஒரு தகவல் கூறுகிறது .

மறு தகவலோ தப்பிக்க மேற்கொள்ளும் பொழுது ஏற்பட்ட பட்டினியால் இவர்கள் படகுடன் பலியாகி இருக்க கூடும் எனவும் தெரிவிக்க படுகிறது .

இதற்கு முன்னரும் இவ்விதம் ஏராளமான ஆவி படகுகள் ஜப்பான் கடல் கரை பகுதியில் ஒதுங்கியுள்ளன .

குறித்த தீவு பகுதியில் இந்த ஆவி படகுகள் மனித சடலங்களுடன் கரை ஒதுங்குவதால் அந்த தீவுக்கு ஆவிகள் தீவு என மக்களினால் பீதியுடன் அழைக்க படுகிறது .

இந்த ஆவி தீவு தொடர்பாக பல மெய் நடுங்க வைக்கும் திகில் கதைகள் நியமாகவே உலவுகின்றன ,

இந்த தீவுக்கு அருகில் ,இவ்வாறான மரத்திலான படகுகளை , ஆவி படகை அண்மித்து சென்றால் ,செல்பவர்கள் உயிருடன் திரும்புவது இல்லையாம் .

அவ்வாறு செல்பவர்கள் இரத்த வாந்தி எடுத்து இறந்துள்ள பல திகிலான உண்மை சம்பவங்கள் இதே பகுதியில் தொடராக நடந்துள்ளன .

இரத்த வாந்தி எடுத்து பலர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது இந்த படகுகள் தொடர்பாக செய்திகள் சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மிரண்டு போய் கூறிய விடயங்கள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .

ஜப்பானில் ஆவி தீவு என்றாலே மக்கள் நடுக்கம் கொள்வர் .

வன்னி மைந்தன் –

மனித உடல்களுடன்

Leave a Reply