பொலிஸாரால் 20 பேர் கைது

Spread the love

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வைத்து பொலிஸ் மோப்பநாயின் ஊடக வாகனங்களை பரிசோதனைக்கு

உட்படுத்தபட்ட போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா, மதனமோதகம், சட்டவிரோதமான சிகரட்டுகள் என்பன மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, மாத்தறை, காலி, குருணாகல் போன்ற பகுதிகளை

சேர்ந்தவர்கள் என குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை சிவனொளி பாதமலைக்கு வருகின்ற பக்த அடியார்கள் போதைப்பொருளை கொண்டுவர வேண்டாமென பொலிஸார் கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply