பகை சிதற களம் வெடிக்கும் ….!

Spread the love

பகை சிதற களம் வெடிக்கும் ….!

மீசை முறுக்கி கொடியை தூக்கு
மீள் எழுவோம் பகையை தாக்கு ….
வந்தேறி மண்ணை ஆள்வதா …?
வரிப்புலி சும்மா இருப்பதா …?

வேவு எடுப்போம்
விரைவாய் தடுப்போம் ….
ஆண்ட மண்ணை மீட்டு வருவோம்
ஆடு தமிழா பாடு தமிழா ….

உரிமைக்காகவே உயிர்கள் ஆயிரம்
உறைந்த மண்ணடா …
உயிர் தந்தவர் நெறிகள் வாழ
உயிர்த்தே வருவோம் வாழ ….

இடர்கள் ஆயிரம் கண்டவர் நாங்கள்
இதையும் தாண்டி நிமிர்ந்தவர் நாங்கள் …
சோதனை ஆயிரம் வேதனையாகலாம்
சோடனை கதைகளும் கூடி ஆழலாம் ..

வென்றே தீருவோம் – ஈழம்
கண்டே தீருவோம் ….
இடையில் பெரும் அமைதி
இல்லையடா வீழ்ச்சி …..!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/03/2019

Home » Welcome to ethiri .com » பகை சிதற களம் வெடிக்கும் ….!

Leave a Reply