நான் ஆட நீ வா …!

Spread the love

நான் ஆட நீ வா …!

உடையாதே பூவே
உன்னை சூடவா …?
உள்ளத்தில கோயில் கட்டி
உன்னை வணங்கவா …?

ஒழுகும் நிலவொளியில்
ஓடி பாடவா ..?
உன்னை நான் விரட்ட
என்னை நீ மிரட்ட …

கோயில் மணி ஓசையில
கொழுந்து காற்றினிலே …..
ஆனந்தம் பிறக்குமே
அதிகாலை உதிக்குமே ….

தேன் சிந்தும் இனிமையில
தேகம் குளிர மனம் மகிழ ….
தந்தனா பாட்டு தான்
தாளமிடும் நேரம் தான் ….

கண்ணே கவலை விடு
காதலே உயிர் கொடு ..
நாளுமே ஊர்கோலம் தான்
நாள் திசையும் எம் வசம் தான் ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -18/03/2019

Home » Welcome to ethiri .com » நான் ஆட நீ வா …!

Leave a Reply