தள்ளிப்போகும் நயன்தாரா திருமணம்?

Spread the love
தள்ளிப்போகும் நயன்தாரா திருமணம்?

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா ‘பிகில்’ படத்துக்கு பிறகு ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையான ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து திருமணத்துக்கு தயாராவதாக கூறப்பட்டது.

நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள். டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக நெருக்கமானவர்கள் பேசினர்.

இதனால் கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்து கொடுக்க அவசரம் காட்டுவதாக கூறப்பட்டது. சமீபத்தில் இருவரும் திருப்பதி சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பியபோது நயன்தாராவிடம் உங்கள் திருமணம் எப்போது? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி நழுவினார்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

இந்த நிலையில் எல்.கே.ஜி. படத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் திருமணத்தை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply