சீனா பேஸ்புக்கு போட்டியாக Digital கரன்சி அறிமுகம்

Spread the love

சீனா பேஸ்புக்கு போட்டியாக Digital கரன்சி அறிமுகம்

உலக நாடுகளை எதிர்வரும் இருபது ஆண்டுகளில் ஆட்டி படைக்க போவது
டியிட்டல் பண பரிமாற்ற மாகும் ,

கையில் பணம் இல்லை எல்லாம் தங்கத்தை போல கோயின்சாக இருக்கும் .

அதனையே டியிட்டல் எக்கனோமிக் என அழைக்கின்றனர் ,பேஸ்புக் புதிய டியிட்டல் கரன்சி ஒன்றை அறிமுகம் செய்கிறது ,பெரும்பாலும் 2020 ஜூன் மதம் அளவில் அது உலக மக்கள் பாவனைக்கு அறிமுக படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

தற்போதுள்ள பிட்கொயின் போல .சீனா பேஸ்புக்கு
அதுபோலவே தற் பொழுது சீனாவின் உள்ளூர் வணிக நிறுவனங்களில் தற்போது Digital Yuan அறிமுக படுத்த பட்டுள்ளது .

யாவரும் கைபேசி ஊடாக பணத்தை செலுத்தி விடுவது .வியாபார நுட்பங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவையாக வடிவமைப்பு செய்ய படுகின்றன .

பார்ப்பதற்கு இலகுவானது போல இருக்கும் ஆனால் அதுவே ஆபத்தான பொருளாதார சந்தையின் கடலுக்குள் நாம் நடந்து செல்வது போன்றது .

அவ்வாறான ஒன்றையே தற்போது சீன உலகம் தழுவிய ரீதியில் அறிமுகம் செய்கிறது ,சொல்ல போனால் அமெரிக்காவுக்கு ஆப்படிக்கும் பொருளாதர மேலாண்மையை மிக இறுக்கமாக நிறுவிட சீனா வெளிப்படையாக ஆரம்பித்துள்ளது .

இதனை அமெரிக்காவினால் இனி உடைக்க முடியாத நிலை ஒன்று உருவாக்கம் பெற போகிறது ,அதன் பாதை விசாலமாக சீனா அமைத்து விட்டது .

சீனாவின் இயக்கம் இல்லை எனின் உலகம் அதன் பொருளாதர உற்பத்தியை இழக்க நேரிடும் என்ற நிலை தற்பொழுது உருவாக்க பெற்றுள்ளது ,இதில் சீனா மகத்தான வெற்றி பெற்றுள்ளது .

இதுவே சீனாவுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும் .சீனா தனது இலக்கு நோக்கி நேர்த்தியாக நகர்ந்து செல்கிறது .

அதற்குரிய எல்லா விதமான பொருளாதார மையங்களை தனது தாய் மண்ணில் வைத்து உலகை ஆட்டுவிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது

இது மிகவும் கடுமையான சவால் நிறைந்த சாலை ஊடாக பயணித்து சீனா வென்று நிமிர்ந்துள்ளது

தனது இருப்பை தக்க வைத்து கொள்ள அது புதிய நாடுகளை பிரசவிக்க தயங்கவும் மாட்டாது என்பதே விரைந்து எழப்போகும் மாற்றங்களின் ஒன்றாக அமைய போகிறது

Author: நலன் விரும்பி

Leave a Reply