சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்-இராதாகிருஸணன்

Spread the love

சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்
பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸணன்

கொத்மலை ஹப்புகஸ்தலாவ மக்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் ‘ஒன்றாய் முன்னோக்கி’ செல்வோம் தேர்தல் பிரசார நடவடிக்கை மலையக மக்கள முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸிணன் தலைமையில் நடைபெற்றது

இதன் பொழுது கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்

சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். இந்த நாட்டில் அன்மையில் ஏற்பட்ட கலவரங்களின் போது சிறுபான்மை மக்களை காப்பாற்றிய பெருமை ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்நதாக இருந்தது. அந்த பிரச்சனைகளை பின்புறமாக இருந்து உருவாக்கியர்கள் எதிரணியில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு கேட்பவர்களே. இதனால் முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தனர். இதனாலயே முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றாக விழகினர். பின் நிரபராதிகள் என்றதும் மீண்டும் இணைந்துக் கொண்டனர். சஹரான் என்ற தீவிரவாதிகளை வளர்த்து எடுத்த பெருமை எதிர்கட்சியினரையே சாரரும் அன்று ஐக்கிய தேசிய கட்சி எங்களை காப்பாற்றியது குருகிய காலத்தில் சம்பந்தபட்டவர்களை கைது செய்து சட்ட நடடிக்கை எடுத்து தற்போது சுமூகமான நிலமை நிலவி வருகின்றது. இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியே

அந்த வகையில் சிறுபான்மை மக்களுக்கு ஐ.தே.கட்சி பாதுகாப்பான ஒரு கட்சியாகும்.அந்த வகையில் இந்த கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அவர்கள் போட்டியிடுகின்றார். இவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது அனைவரினதும் கடமையாகும் அதனால் அனைவரும் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மேலும் கூறினார்

Leave a Reply