கொழும்பில் பொலீஸ் பதிவு மனோ

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்
Spread the love

கொழும்பில் பொலீஸ் பதிவு மனோ

கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில்.எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் 21 602db4db47e0a அவர்களின் பிரதிநிதி.

கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன்.

துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளேன்.


பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன்.
கீழ்மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், ‘மேலிடம் கூறிதான் செய்கிறோம் என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள்..

கொழும்பில் பொலீஸ் பதிவு மனோ

இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம்.. .

கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த பாராளுமன்றத்தில் இல்லையா?
குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை.

நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைதான் நான் கூறுகிறேன்.

நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இது நியாயப்படுத்த முயல வேண்டாம்.


உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.

No posts found.