காலம் வரும் காத்திரு …..!

Spread the love

காலம் வரும் காத்திரு …..!

நதி வீழ்ந்த ஏரியில
நான் போறேன் அழுகையில ….
கை கொடுப்பார் யாருமில்ல
கண் துடைப்பார் எவருமில்லை …

கூடி வந்த உறவெல்லாம்
கூடி தினம் நகைக்குதே ….
கேலிகள் கூத்தாக
கேவலமாய் போனேனே …..

தேடிவந்த வேளையிலே
தேவைகளை தீர்த்தவனை
கால் பந்தாய் அடிப்பதுவோ …?
கடதாசியாய் வீசுவதோ ..?

ஒத்த ரூபா இல்லாம
ஒடிந்து நான் நிக்கையிலே
நித்தம் பல கையேந்தி
நிர்கதியாய் போனானே ….

நாளை ஒரு காலம் ஒன்று
நாடி வரும் வேளை அன்று
காத்திருப்பீர் நல்லவரே
கால் துடைப்பீர் வல்லவரே …

நிகழ்காலம் கூறி விடும்
நிகழ்வுகள் மாறி விடும் …
வாய் எறிந்த சொல்லடிகள்
வாயில் வந்து வாலாட்டும் ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -05/03/2019

Home » Welcome to ethiri .com » காலம் வரும் காத்திரு …..!

Leave a Reply