என் காதலை ஏற்றுவிடு …!
உடையாத நிலவே
உள்ளம் தரவா …?
உயிரையே தாரேன்
உள்ளே வரவா ..?
ஒத்தவரி சொல்லம்மா
ஒத்துகிறேன் எண்ணம்மா ….
கரை தேடும் அலைபோல
காத்திருக்கேன் நானம்மா …
ஏக்கம் தந்து போறவளே
என்ன பதில் சொல்லாயோ ..?
தாக்கம் தந்து நின்னவளே
தகுமென்னு கூறாயோ …?
பாதி நாளு தூங்கவில்லை
பகலிரவு தெரியவில்லை …
என்னாச்சோ தெரியவில்லை
என்னையே காணவில்லை ….
உன்னாலே தவிக்கிறேனே
உள்ளமே புரிந்திடுவாய் …..
இந்நாளு உந்தனுக்கே
இதயம் தந்திடுவாய் ……..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -01/03/2019