கண்ணீர் சமர்ப்பணம் …..!

Spread the love

கண்ணீர் சமர்ப்பணம் …..!

நேற்றெங்கள் வீதியிலே
நீள் நடந்த நிலவு ..
பேச்சின்றி போனதுவோ ..?
பேர் இடி தந்துவே ….

கால் ஊன்றி நடக்கையில
கை பிடித்து சென்றவளே …
வேர் பிடித்து நாம் நிமிர
மோர் வாத்து நின்றவளே ….

உன் வலியை உளம் புதைத்து
உன்னை நீ வதைத்து …
எழுந்து நடந்தவளே
ஏற்றங்கள் கண்டவளே ….

வேரறுந்து வீழ்ந்தாயோ ..?
வேறாகி போனாயோ …?
பொங்கி வரும் கண்ணீரை – உன்
பொற்பாதம் தூவுகிறோம் …

கலகலத்த உன் பேச்சு
கனிவான உபசரிப்பு ….
நெஞ்சம் ஏறி நினைவு தூற
நெஞ்சே தீ தின்ன மறைந்தாயே …..!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/05/2019

Home » Welcome to ethiri .com » கண்ணீர் சமர்ப்பணம் …..!

Leave a Reply