ஐநாவில் இன்று முழங்கும் இலங்கை

Spread the love

ஐநாவில் இன்று முழங்கும் இலங்கை

இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளில்

இருந்து விலகுவது குறித்து வெளிவிவகார அமைச்சர் தமது உரையின் ஊடாக அறிவிக்கவுள்ளார்.

அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆற்றவுள்ள வாய்மூலமான உரைக்கும்

வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட 30/1 மற்றும் 2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட 34/1

தீர்மானங்களின்படி இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள், மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்வதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

இதற்கமைய 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பு செய்ய

வேண்டும் என பிரித்தானியா தலைமையில் கடந்த 2009 ஆம் ஆண்டு 40/1 என்ற தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட இணை அனுசரனையையே விலக்கிக்கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளமை குறிப்பிடதக்கது.

ஐநாவில் இன்று முழங்கும்

Leave a Reply