என் மனதை பறித்தவள்…!

Spread the love

என் மனதை பறித்தவள்…!

கிளிநொச்சி சந்தையில
கிளியே உன்னை கண்டேனே …
மாம்பழத்தை உண்ணையிலே
மனதை தொலைத்தேனே ..

செவந்த உதட்டினிலே
செந்தமிழ் உதிரையில …
பார்த்து வியந்தேனே
பைங்கிளியே மகிழ்ந்தேனே ….

கூவி தமிழ் பாட
குலைந்து தோகையாட…
மெலிந்த பூவழகே
மெல்ல எனை இழந்தேனே …

கண்ணால மணியடித்து
காதல் தூது விட்டாய் …
பேரழகே வாடுகிறேன்
பேரன்பை தேடுகிறேன் ….

ஒரு நாளு மணவறையில்
ஒண்ணாகும் வேளையில் …
சொல்லத்தானே போறேன் – அடி
சொர்க்கத்தானே போறாய் ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07/04/2019

Home » Welcome to ethiri .com » என் மனதை பறித்தவள்…!

Leave a Reply