உலகம் பாடும் ஓடு …!

Spread the love

உலகம் பாடும் ஓடு …!

கத்தி வரும் காற்றடித்து
கால் உடைந்து நான் விழவோ ..?
பற்றி வரும் தீ பிடித்து
பால் மேனி எரிந்திடுமோ …?

சுற்றி வரும் பகை பார்த்து
சூழல் பந்து வீழ்ந்திடுமோ ..?
கொட்டுகிற அருவியில
கொள்கை வீழ்ந்து செத்திடுமோ ..?

சத்தமிடும் வாய்கள் எல்லாம்
சாதனையை துப்பிடுமோ …?
சாளரத்தை பூட்டி வைத்து
சங்கதிகள் மறைத்திடுமோ …?

வெள்ளை மன சிந்தனையோ
வெற்றிகளை கொட்டி விடும் …
தட்டி வந்து கைகள் கூடி
தன் நம்பிக்கையை செப்பிவிடும் …

ஒற்றையில உள்ளாய் என்று
ஒரு போதும் எண்ணாதே …
தப்பு இன்றி நீ நடப்பின்
தரணி உன்னை பாடி விடும் …>!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )

ஆக்கம் -24/05/2019

உலகம் பாடும் ஓடு
உலகம் பாடும் ஓடு

      Leave a Reply