வழி கொடு இறைவா ….!

Spread the love

வழி கொடு இறைவா ….!

கண்ணீர் உதிர
கைகள் தொழுதேன் …
கடவுள் என்றால்
கருணை காட்டு …

விந்தை உலகில்
வீசி எழ …
சிந்தை புகுந்து
சிறகு கட்டு …

நோதல் தாங்கி
நொந்து வெந்தேன் …
கிண்டல் செய்தார்
கிலி கொள்ள வை …

கந்தல் கிழிய
கருணை காட்டு …
கண்ணீர் துளியை
கையால் தட்டு …

உன்னில் வெறியன்
உந்தன் மறவன் …
இன்று நிமிர
இறைவா காட்டு …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -04/04/2019

Home » Welcome to ethiri .com » வழி கொடு இறைவா ….!

Leave a Reply