ஆன்மீகத்தில் இறங்கிய சிம்பு

Spread the love
ஆன்மீகத்தில் இறங்கிய சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படம் தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளுமே முடிந்துவிட்டன. சிம்புவின் தேதிகளுக்காக காத்திருந்தது படக்குழு. ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘மாநாடு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விட்டார். மேலும், இன்று ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடவுள்ளார். 40 நாட்கள் விரதம் இருந்து கோயிலுக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார்.

சிம்பு

1992-ஆம் ஆண்டு ‘எங்க வீட்டு வேலன்’ படத்துக்காக ஐயப்பனுக்கு மாலை போட்டார் சிம்பு. அதனை தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மாலை போட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லவுள்ளார். சிம்புவின் இந்த மாற்றம் திரையுலகினர் மட்டுமல்லாது, அவரது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரது மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Leave a Reply